Freelancer / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளில் புதிதாக 6 என்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் 4 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 65 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 31 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 04 என்புக்கூட்டு தொகுதியுடன் சேர்த்து, இதுவரை 130 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 141 என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன. R
14 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
1 hours ago