S.Renuka / 2025 மார்ச் 23 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார்.
இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்குத் தேவையான விந்தணுவைப் பெற முடியும் என்றும், அதை மிகவும் இரகசியமாகவும் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
விந்தணு வங்கிக்கு விந்தணுவை தானம் செய்யும் திறன் கொண்டவர்கள் என்றும், அதற்காக ஒரு சில சோதனைகளை மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
விந்தணுவை யார் பெற்றார்கள், யார் கொடுத்தார்கள் என்பதை யாரும் அறிய வாய்ப்பில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .