2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இழப்பீட்டை வழங்க X-Press Feeders நிறுவனம் மறுப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் பயணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான (MV X-Press Pearl) கப்பல் தீப்பற்றி எரிந்தது. 

இதனால் நாட்டின் கடல் வளம் பாரிய அளவில் மாசடைந்ததுடன், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கியிருந்தன. அத்துடன் கடல் வளமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அதற்குரிய இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

எனினும் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுப்பு வௌியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .