2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

உயிரிழந்த கோழிகள் மனித நுகர்வுக்கு விற்பனை ; மூவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு காரணங்களால் பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை, மனித நுகர்வுக்காக விற்பனை செய்த வியாபார நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட ஆணமடுவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர், 75 கிலோகிராம் அசுத்தமான இறைச்சியுடன்  மூவரை கைது செய்துள்ளனர்.

 உயிரிழந்த கோழிகளை விலங்கு உணவுக்காக எடுத்துச் செல்வதாக கூறிவிட்டு, அவற்றை மனித நுகர்வுக்காக விற்பனை செய்து வந்த வர்த்தகர், விநியோகஸ்தர் மற்றும் இந்த மோசடியுடன் தொடர்புடைய மற்றொருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த சுற்றிவளைப்பை ஆணமடுவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சிசில் சாமர ஹேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X