Editorial / 2026 ஜனவரி 29 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஒரு பவுண் 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (29) நிலவரப்படி 24 கரட் ஒரு பவுண் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பவுண் 22 கரட் தங்கம் 384,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .