Editorial / 2026 மார்ச் 18 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிலவும் எரிபொருள் விநியோக அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு (QR Code) முறையுடன் இணைந்ததாக இந்த புதிய நடைமுறை அமையும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
புதிய விநியோக முறை விபரங்கள்:
எரிபொருள் விநியோகமானது திகதிகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அதிகரித்த தேவையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் QR குறியீடு அடிப்படையிலான விநியோக முறையை அரசாங்கம் மீண்டும் கட்டாயமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago