2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

Freelancer   / 2023 மார்ச் 18 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை – பரமானந்தா மாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவரே காயமடைந்துள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக் கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X