2026 மார்ச் 04, புதன்கிழமை

களுத்துறையில் வெடித்து சிதறிய மின்மாற்றி

Editorial   / 2026 மார்ச் 04 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக  களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் அயலவர்கள் இணைந்து சுமார் 20 நிமிட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 

இந்தத் தீ விபத்தினால் மின்மாற்றி பகுதி அளவில் சேதமடைந்துள்ளாதாகவும் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழலும் காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .