Freelancer / 2025 டிசெம்பர் 20 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.R
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago