2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

காலியில் 15 பேருக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட பெண்ணுடன் நெருங்கி பழகிய சிலர், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக, ஹபராதுவ பகுதிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில்  15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேற்படி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு, 55 பேர் கொழும்பிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டிருந்த நிலையில், 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களை, இரணவில வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .