Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 15 , பி.ப. 01:41 - 1 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டியது, மரண தண்டனையாகவே அமையவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரரிவித்துள்ளார்.
சஹ்ரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை, சிங்களவர்கள் பெரிதும் நம்பியிருந்தனர் என்றும் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் போது, சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமாயின், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியதைப் போல, அனைத்து முஸ்லிம்களது வீடுகளும் பள்ளிவாயல்களும் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சஹரான் குழுவினரின் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
madu Saturday, 15 June 2019 08:29 AM
your the first man to go
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago