2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா நோயாளர்களுக்கு கிழக்கில் 4 வைத்தியசாலைகள்

Nirosh   / 2020 ஒக்டோபர் 10 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு வைத்தியசாலைகள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுத் தொடர்பில் சுகாதார அமைச்சுப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன், மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே இவ்வாறுப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை உள்ளிட்டச் சுகாதாரப் பிரிவுகளில் உள்ள வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .