2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சஹ்ரானின் சகா கைது

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பைக் கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தில், வெலிமடையைச் சேர்ந்த ஒருவர், நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை - பொரகஸ் சீல்மியாபுர, புதுர்திஸா மாவத்தையைச் சேர்ந்த 21 வயதான நபரே, கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர், சஹ்ரானின் போதனை வகுப்புகளில் பங்குபற்றினார் என்றும், மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சந்​தேநகபர்களுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்ப ட்டுள்ளனவென பொலிஸார் தெரிவித்தார்.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .