Simrith / 2025 மே 05 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பதுளை நீதவான் நீதிமன்றம் 2025 மே 19 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் சுமத்தப்பட்ட 03 ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் கடந்த மார்ச் 27 ஆம் திகதி இலஞ்ச ஊழல் சாத்துதல் புலனாய்வு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் ஒரு குற்றச்சாட்டிற்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ஒரு அரச வங்கியில் ரூ. 01 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், ஒரு அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெறுவதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 23 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago