2026 மார்ச் 18, புதன்கிழமை

செம்மணியில் நேற்று 12 எலும்புக்கூடுகள் அடையாளம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய  அகழ்வின் போது புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள் அகழ்வு நேற்று (31) இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது 12 மனித எலும்புக்கூடுகள்  புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூடுகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 191 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X