Freelancer / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கனகராசா ஜீவராசா என்ற "யாழ்ப்பாண சுரேஷ்” மற்றும் அந்தோணிப் பிள்ளை ஆனந்தம் ஆகியோர் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1. கனகராசா ஜீவராசா அல்லது "யாழ்ப்பாண சுரேஷ்": செவ்வந்தியைப் போல் ஒத்திருக்கும் "தாக்ஷி" என்ற பெண்ணை அறிமுகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
2. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்தோணிப் பிள்ளை ஆனந்தம்: செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல "ஜே.கே. பாய்" என்ற கென்னடி பஸ்தியன் பிள்ளைக்கு படகு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
சந்தேக நபர்கள் இருவரும் அக்டோபரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
"யாழ்ப்பாண சுரேஷ்" நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட "ஜே.கே. பாய்" என்பவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், படகை வழங்கியதாகக் கூறப்படும் ஆனந்தத்தை பொலிஸாரால் கைது செய்ய முடிந்தது. R
8 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026