2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

ஜெரோம்க்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த முயன்றார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  போதகர்  ஜெரோம் கிறிஸ்டோபர் பெர்னாண்டோவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜிந்த ஜயசூரிய இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய அறிக்கைகள் அடங்கிய இறுவெட்டை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் சர்வதேச அரசியல் மற்றும் மத ஒருமித்த சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X