2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஜோன்ஸ்டனுக்கும் மகன்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Freelancer   / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை தவறாக பயன்படுத்தியதாக நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் ஜோஹான் பெர்னாண்டோ, அவரது இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .