2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

தள்ளாடிய இருவருக்கும் சிக்கல்

Editorial   / 2024 நவம்பர் 15 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்த ஜயவிக்ரம கனிஷ்ட கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் 98ஆம் இலக்க வாக்களிப்பு நிலையத்தில் மைதானத்தில் இருந்து கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் திஸ்ஸமஹாராம உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், கிரிந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் உத்தியோகத்தருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் மதுபோதையில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X