2025 ஜூன் 18, புதன்கிழமை

தோல் பொருட்கள் தொழிலதிபர் கடத்தி எரித்து படுகொலை

Simrith   / 2025 மே 28 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து  கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளத்சிங்கள-யடகம்பிட்டி-நாகஹதொல-யோதகந்த துணைப் பாதையில் அடையாளம் காணப்படாத ஒருவரின் அரை எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்றதாக புளத்சிங்கள பொலிஸ்  தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பாதுக்க, மஹிங்கல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல கீதானந்த அமரசிங்க (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .