2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாமலுக்கான வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்

Editorial   / 2019 மார்ச் 23 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு எதிராக,  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.

எனினும், சந்தேகநபர்கள் வெளிநாட்டுக்குச் செல்வது தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு, நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவினூடாக, எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என, நீதவான் அறிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஸஷவுக்குச் சொந்தமான நிறுவனமானது, ஏனைய நிறுவனங்களுடன் முன்னெடுத்த கொடுக்கல் வாங்கல்களின் போது முறையற்ற விதத்தில் நிதி திரட்டியமை, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினூடாக நிறுவனமொன்றைக் கொள்வனவு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X