Freelancer / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகர்வோருக்கு 130 க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யத் தேவையான பழுப்பு சீனி தொகை சதொசவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நாளை முதல் இலங்கை சீனி நிறுவனத்தால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வாக்கும்புர தெரிவித்தார்.
நாட்டில் சீனி விலை அதிகரிப்பால் நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை போக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தொலைபேசியில் தெரிவித்தார்.
செவனகல, பெலவத்த மற்றும் ஹிங்குரான சீனி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சீனி இலங்கை சீனி நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் சீனியை ரூ .130 க்கு வாங்க முடியும் என குறிப்பிட்டார்.
இலங்கை சீனி நிறுவனத்தின் சீனி இருப்பு குறைந்து விட்டால், அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகையின் கீழ் சீனியை இறக்குமதி செய்யவும், நாட்டில் இருக்கும் சீனி ஏகாதிபத்தியத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீனியின் இறக்குமதி வரியை 50 ரூபாயில் இலிருந்து அரசாங்கம் குறைத்தது என்றும் ஆனால் சந்தையில் சீனியின் விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago