Janu / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது காதலியின் நிர்வாண வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்வதாக மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இளைஞனை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சிறிது காலமாக காதல் உறவில் இருந்துள்ளதுடன் இதன்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் போது காதலியின் அனுமதியுடன் அதை காணொளியாக பதிவு செய்துள்ளார்
பின்னர் வாட்ஸ் அப் மூலம் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறியதாக பெண்ணை மிரட்டியுள்ளார்.
சந்தேக நபரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உதயங்க முனவீர, இந்த வீடியோக்கள் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டதாகவும், தனது வாடிக்கையாளரை ஜாமீனில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதவான், பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
11 minute ago
18 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
43 minute ago
48 minute ago