2026 மே 04, திங்கட்கிழமை

நீர் விநியோகத்தில் சிக்கல்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் பண்டிகை காலம் காரணமாக நீரின் பயன்பாட்டில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையானது,  நீர் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, 24 மணிநேரமும் நீரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென சபை தெரிவித்துள்ளதுடன், இதன் காரணமாக உயரமான பிரதேசங்களில் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குறைந்தளவு நீரே விநியோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு நீரை விநியோகிப்பதற்காக, ஏனைய பிரதேசங்களிலுள்ளவர்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .