2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நெஞ்சில் கம்பு ஏறிய மாணவன் உயிரிழப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, புளத்சிங்கள பிரதேசத்தில் கடந்த 27ஆம் திகதி மரமொன்றிலிருந்து வேலியொன்றின் மேல் விழுந்த மாணவன், நெஞ்சுப் பகுதியில் கம்பு குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை, இன்று வெள்ளிக்கிழமை (30) காலை 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

16 வயதான குறித்த மாணவன், தனது மாமாவுடன் வயலுக்கு சென்றுள்ளார். அங்குச்சென்று, அருகிலிருந்த மா மரத்தில் ஏற்றியுள்ளார். அதன்போதே, மரத்திலிருந்து தவறி, மாமரத்துக்கு கீழிருந்த வேலியில் விழுந்துள்ளார். 

அந்த கம்பு மாணவனின் நெஞ்சுப் பகுதியை பதம்பார்த்துள்ளது. சம்பவத்தையடுத்து அவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும், கம்பு அகற்றப்படாமல் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அங்கு ஆறுமணிநேரம் மேற்கொண்ட சத்திர சிகிச்சையடுத்தே அக்கம்பு அகற்றப்பட்டது. 

தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை இந்த மாணவன் உயிரிழந்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X