Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி நகரத்தில் பிரதான பஸ் தரிப்பிடத்தை வீடியோவாக பதிவு செய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமது செயற்பாடு குறித்து ஏற்றுக்கொள்ளும் வகையிலான காரணங்களை முன்வைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரை கைதுசெய்ததாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறக்குவானை, உக்வத்த பிரதேசத்தை சேர்ந் 33 வயதுடைய நபர் ஒருவரும் கோகாலை, ஹேம்மாவத்தகம பகுதியை சேர்ந்த 49 வயதுடைய முஸ்லிம் பிரஜைகள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான பஸ் தரிப்பிடம் மற்றும் நகரத்தை வேறு பகுதியில் இருந்து வந்த இருவர் நேற்றைய தினம் (09) வீடியோ பதிவு செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, பொலிஸாரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026