Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2024 ஒக்டோபர் 01 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்ட நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு முழு மன்னிப்பு மற்றும் அவரது குடிமை உரிமைகளை வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் புதிய முறையீடு செய்யவுள்ளதாக நேற்று தெரிவித்தார்
“எனது குடியுரிமைகளை மீட்டெடுக்கக் கோரி நான் விரைவில் தற்போதைய ஜனாதிபதி திஸாநாயக்கவிடம் முறையிடுவேன். முன்னாள் ஜனாதிபதி என்னை மன்னித்துவிட்டார். இருந்தாலும் என் வாய் இன்னும் அடைத்து வைக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கப்பட்டு இருக்கிறது.
எனது குடியுரிமைக்காக புதிய ஜனாதிபதியிடம் புதிய வேண்டுகோள் விடுக்கிறேன். நான் எந்த குற்றத்திற்காகவும் சிறைக்கு அனுப்பப்படவில்லை என்பதால் நான் அதைப் பெறுவேன் என்று உணர்கிறேன், ”என்று அவர் டெய்லி மிரரிடம் கூறினார்.
ஒகஸ்ட் 25, 2022 அன்று, அவர் 2017 ஆம் ஆண்டு அலரிமாளிகைக்கு வெளியே தெரிவித்த அறிக்கையின் மீது நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை சமர்ப்பித்த ராமநாயக்க, தனது கருத்து பிரதம நீதியரசர் மற்றும் முழு நீதித்துறையையும் முற்றிலும் அவமதிப்பதாக ஒப்புக்கொண்டார்.
ராமநாயக்க தனது வாக்குமூலத்தில் ஆழ்ந்த மன்னிப்புக் கோரியதோடு, முழு நீதித்துறையினரின் மன்னிப்பையும் கோரினார். மேலும், ஒகஸ்ட் 21, 2017 அன்று தான் வெளியிட்ட அறிக்கையைத் திரும்பப் பெறப் போவதில்லை எனக் கூறி உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூறிய இழிவான அறிக்கைக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.
மேலும், தனது வாழ்நாளில், இனி ஒருபோதும் நீதித்துறையை அவமதிக்குமாறு எதையும் செய்ய மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
ரஞ்சன் ஜனவரி 2021 இல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 34(1) ஆவது உறுப்புரையின் படி, இலங்கையின் எந்தவொரு நீதிமன்றத்திலும் எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை மன்னிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அரசியலமைப்புச் செயல்முறை பின்வருமாறு வழங்குகிறது:
(1) வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு அறிக்கையைத் தயாரிக்க ஜனாதிபதி கோருவார்;
(2) அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அவருக்கு அனுப்பப்படும்;
(3) அதன்பிறகு, அந்த அறிக்கை நீதியமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவரது பரிந்துரையுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago