Editorial / 2026 மே 03 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ. சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக, சுகாதாரமற்ற முறையிலான களஞ்சியப்படுத்தலின் கீழ் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பால் உற்பத்திப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பழுதடைந்த நிலையிலும், உரிய வெப்பநிலையை முறையாகப் பேணாமலும் கொண்டு செல்லப்பட்ட இப்பொருட்கள், களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குரிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த. கஜனனினால் நேற்று (02.05.2026) சனிக்கிழமை கைப்பற்றப்பட்டன.
இதன்போது 448 யோக்கட் (Yogurt) பக்கெட்டுகளும், 143 யோக்கட் பானங்களும் கைப்பற்றப்பட்டு அங்கேயே அழிக்கப்பட்டன.
குறித்த பானங்களைக் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு சென்ற நபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
2 hours ago