Freelancer / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவால் வழங்கப்பட்ட டீசலில் இயங்கும் குளிரூட்டப்பட்ட பல்வகை அலகுகளைக் கொண்ட ரயிலில் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், RITES நிறுவன பிரதிநிதிகள் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் பயணித்துள்ளனர்.
ரயில் ஒன்றின் பரீட்சார்த்தப் பயணம் கடந்த 18 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையிலே அதிகாரிகள் அந்த ரயிலில் பயணித்துள்ளனர் என, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவால் வழங்கப்படும் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்த ரயில் வழங்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட முதலாவது ரயில் ஜனவரி 09ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ரயில் தொகுதிகள் விநியோகம், ரயில் பாதைகளை தரமுயர்த்தல் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கும் கோரிக்கைக்கும் அமைவாக பரஸ்பரம் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையிலான ஏனைய திட்டப்பணிகள் ஆகியவற்றுக்காக இந்த 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி திட்டத்தை வழங்க 2014-15 காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு முதல் மாத்தறை வரையான ரயில் பாதையை தரமுயர்த்தல், ஓமந்தை முதல் பளை; மடு தேவாலயம் முதல் தலைமன்னார்; மதவாச்சி முதல் மடு; மற்றும் பளை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் பாதைகள் அமைப்பு, சமிக்கை தொகுதிகளை பொருத்துதல், மற்றும் இலங்கை புகையிரத சேவைக்கு தேவையான ரயில் தொகுதிகள் விநியோகம் ஆகியவற்றுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் உதவி திட்டம் பங்களிப்பு செய்துள்ளது என்றும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago