Mayu / 2024 ஜூலை 30 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேகமாகப் பாயும் வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்துக் கொண்டு நபரொருவர் உயிருக்குப் போராடும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. அவரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழந்துள்ளது.
Man stuck in mud in Mundakayi area, Wayanad, Kerala.#WayanadLandslide #Wayanad #Kerala #BREAKING pic.twitter.com/yWQKsTe53r
— Chaudhary Parvez (@ChaudharyParvez) July 30, 2024
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபர், பெரிய பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். எனினும், நிலச்சரிவினால் ஏற்பட்ட சேறுகளில் சிக்கி அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. எனினும், தொடர்ந்து எழுந்து நிற்க முயற்சித்து உயிர் பிழைக்க சிரமப்பட்டு வருகிறார்.
முண்டக்கை டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை (30)அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago