2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரசவித்த சிசுவை எரித்த தாய் கைது

R.Maheshwary   / 2021 ஜூலை 13 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

தான் பிரசவித்த சிசுவை, கொன்று அதனை எரித்த 3 பிள்ளைகளின் தாயொருவர் கந்தளாய் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (12) மாலை இச்சிசுவை குறித்த தாய் பிரசவித்துள்ளதுடன், அச்சிசுவை எரித்து, வீட்டுத்தோட்டத்தில் புதைத்துள்ளா​ர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபரான தாய் கைதுசெய்யப்பட்டா​ர் என்றும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதானவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் கடந்த 4 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .