2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Simrith   / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, எரிபொருளுக்கு நியாயமான விலை கோரி மீனவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகினார்.

"ஒரு லிட்டர் எரிபொருளை 100 ரூபாய்க்கு வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது, அதன்படி விலை குறைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கடந்த ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகிறோம், ஆனால் எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை, ”என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மீனவர்களுக்கு பிரதி அமைச்சர் எதுவித பதிலும் வழங்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .