S.Renuka / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பொது மக்கள் மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவ நிபுணரான பேராசிரியர் மியுரு சந்திரதாச கூறுகையில், இதுபோன்ற நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக்கு பிறகு, மக்களிடையே மன அழுத்தம் பொதுவானது.
நீங்கள் அத்தகைய அழுத்தத்தில் இருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் கண்டு, பின்னர் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை அடையாளம் காண வேண்டும்.
இந்த சூழ்நிலையால் யாராவது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்து தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
இந்தப் பேரிடர் காரணமாக சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால், முடிந்தவரை அவர்களின் வாழ்க்கையை இயல்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லது தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும் என்றார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago