2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பேர வாவியில் படகு சேவை ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு சேவையில், ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொழும்பு கோட்டையில் இருந்து கொப்பனி வீதிக்கு பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும் நிலையில் இந்த படகுசேவையின் ஊடாக 9 - 10 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த சேவையை ஆரம்பித்து வைத்தார்.

கடற்படையினரின் பூரண பாதுகாப்பில் இந்த சேவை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .