2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பேண்தகு யுகத்தின் பிரார்த்தனை பிரகடனம்

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கேற்ப, பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் நோக்குடன் “பேண்தகு யுகம் மூன்றாண்டு உதயம்” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்றுப் பிரகடனப்படுத்தப்பட்டது.  

2030 ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் நோக்குடன், இலங்கை திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித் திட்டம், இதன்போது ஜனாதிபதியினால், பேண்தகு யுகம் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மொஹான் குணசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .