R.Tharaniya / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) ஊழியரான 41 வயதான அனுருத்த குமார, குருநாகல் பகுதியில் மின்சார மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது புதன்கிழமை(03) அன்று உயிரிழந்துள்ளார்.
போவத்த-வீரபோகுன பாதையில், சேதமடைந்த குறைந்த மின்னழுத்த மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் மதியம் 12.45 மணியளவில் நிகழ்ந்தது.
பழுதுபார்க்கும் பணியின் போது அவருக்கு மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
வீரபோகுன அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் குளியாபிட்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவ குழுக்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் காலமானார்.
6 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago