2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்காகி கணவன் பலி

Editorial   / 2019 மார்ச் 23 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, மனைவி, கணவனைக் கத்தியால் குத்தியமையால், கணவன் உயிரிழந்த சம்பவம், கொட்டாவ - லியனகொட எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான, ஆடை நிலைய வர்த்தகர் ஒருவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்திக்குத்தை மேற்கொண்ட ​மனைவி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் இன்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, கணவர் தன்னைத் தாக்கியதாகவும் இதன்பின்னரே, தானும் கத்தியால் அவரை மீண்டும் தாக்கியதாகவும், கைது செய்யப்பட்ட மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X