Editorial / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி) மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
28, 35 மற்றும் 45 வயதுடைய சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பழைய காட்சிகளுடன் முந்தைய எல்.ரீ.ரீ.ஈ மாவீரர் நினைவேந்தல்களின் காணொளிகள் இந்த ஆண்டு கொண்டாட்டங்களாக அவர்கள் தரவேற்றியுள்ளனர்.
வன்முறையைத் தூண்டியமை மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஆகியவற்றின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிஐடி மற்றும் டிஐடியினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
48 minute ago