Freelancer / 2026 மார்ச் 13 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டின் போது, ஊழியர்களுக்கு தற்போதுள்ள அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது ஒரு குறுகிய கால அல்லது இலகுவான செயல்முறை அல்ல, மாறாக நீண்டகால மற்றும் திட்டமிட்ட ஒரு மாற்றமாகும். இந்த மாற்றத்தின் போது ஊழியர்களுக்கும் புதிய நிறுவனங்களுக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தைகள் மற்றும் முறையான பொறிமுறை அவசியம் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஊழியர்களின் மன அமைதியை உறுதிப்படுத்துதல், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் அவர்கள் திருப்தியுடன் பணியாற்றுவதற்கான சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதிப்படுத்தவும், துறைசார்ந்த சவால்களை முறியடிக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
புதிய மாற்றத்தின் அவசியத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு, எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.
வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்க்கம் இல்யாஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (a)

8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago