2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் ஆபத்து; மக்களே அவதானம்...

Freelancer   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தளும்புகள் அல்லது வௌ்ளை நிற கொப்புளங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெற்றோர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த தொற்று ஏற்படுவதால், அவ்வாறான கொப்புளங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுமாயின் பிள்ளைகளை வௌி இடங்களுக்கு அனுப்பாது சில நாட்கள் வரை வீடுகளில் வைத்திருக்குமாறும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X