Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 17 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்துராஜவல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையானது நாரா நிறுவனத்தால் கனிய வள அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த எண்ணெய் கசிவால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணெய் கசிவால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதற்காக செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாரா நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முத்துராஜவல எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் எரிபொருள் கசிவு ஏற்பட்டதுடன், இதனால் எண்ணெய் படலங்கள் திக்ஓவிட்ட பகுதியில் இருந்து உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை ஓரங்களில் படிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago