S.Renuka / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை புதன்கிழமை (2) விதித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது சுமார் ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முன்னெடுத்த நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால பகுதியில் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, அப்போது அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த சாந்தி சந்திரசேனவுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சம்பளத்தில் எரிபொருள் கொடுப்பனவு சேர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும், எரிபொருள் ஓர்டர்கள் மூலம் 2.6 ரூபாய் மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியது மற்றும் இந்த சலுகைகளை வழங்க அரசாங்க அதிகாரிகளை வற்புறுத்தியதை குற்றச்சாட்டுகள் விவரித்தன.
விரிவான விசாரணைக்குப் பிறகு, வழக்குத் தொடுப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக நீதிபதி தீர்மானம் செய்துள்ளார்.
இதன் பின்னர், இரு பிரதிவாதிகளும் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றவாளிகள் என கூறி 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago