2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

Freelancer   / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்  ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 4 இலட்சம் இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலுவையில் உள்ளன. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னைய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து, இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. 

இதன் காரணமாக தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம்   அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .