2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மேலும் 20 பேர் குணமடைந்தனர்

Editorial   / 2020 மே 21 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,028 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் 415 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 20 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன், 40 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,085 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X