2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாணவனுக்கு மரணதண்டனை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்குக் கற்பித்த ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று, அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்ததாகக் கூறப்படும், அவரது மாணவனைக் குற்றவாளியாக இனங்கண்ட மாத்தறை மேல் நீதிமன்றம், அவரதுக்கு நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 

மாத்தறையில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காகச் சென்றிருந்தபோதே, அவர், ஆசிரியையைப் படுகொலை செய்திருந்தார். 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் மாத்தறை கொமங்கொட மல்காந்தி ராஜபக்ஷ யாப்பா (52) என்ற ஆசிரியையே பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆசிரியையிடம் கல்விக்கற்ற பீ.ஜி. மஹேந்திர பிரதீப் (வயது 32) என்பவருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கொள்ளையடிப்பதற்காக ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஆசிரியை தன்னைக் கண்டுகொண்டதால், தான், அவரை படுகொலை செய்ததாக வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தவர் ஏற்கெனவே, வாக்குமூலம் அளித்திருந்தமை தெரிந்ததே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X