2026 மே 15, வெள்ளிக்கிழமை

யானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் பலி

Editorial   / 2026 மே 15 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் சிக்கி 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்: தந்தை தனது மகளை அவரின் வேலைத்தளத்தில் விடுவதற்காக துவிச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

யானையின் தாக்குதலினால் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக வில்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .