Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழில் ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
வலி. வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரவு 10 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது பொலிஸ் உப பரிசோதகர் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதனை அடுத்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற ஏனைய பொலிஸார், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மேலதிக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் அதிகாரி மீது வாள் வெட்டினை மேற்கொண்ட இருவரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், குழு மோதலில் ஈடுபட்ட ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
15 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago