Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
யாழ். கொழும்புத்துறை பகுதியில் நேற்று (20) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்புத்துறை பகுதியில் நேற்று இனந்தெரியாத நபர்களால் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
இதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago