Editorial / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை ஆதார மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
ரசாயன வாயுவை நுகர்ந்த பாடசாலை மாணவிகள் 13 பேர் பாணந்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டள்ளனர்.
மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனையின் போது அவர்கள் ரசாயனப் பொருளை சுவாசித்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .