2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ரஷ்ய ஜனாதிபதிக்கு மைத்திரி அழைப்பு

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு மிக விரைவில் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

இருவருக்கும் இடையிலான சந்திப்பு, ஜூன் 15ஆம் திகதி இடம்பெற்றது.   ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாடு, தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது  

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்காவினால் வர்த்தக தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .